Sunday, January 27, 2013

வன்னியனே எங்கே செல்கிறாய்?

வன்னியர்களின் வாழ்வியல் நிலையை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்ட  வன்னியர் சங்கமும்,  பாட்டாளி மக்கள் கட்சியும் மருத்துவர் அய்யா தலைமையில் வன்னிய மக்களின் உரிமைகளுக்காக போராடியது. 1987 ல் 21 உயிர்களை இழந்து நடத்தப்பட்ட சமூக நீதிக்கான சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து , காங்கிரஸ் அரசு வன்னிய பிரதிநிதிகளை வாழப்பாடியார் மூலமாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. திரு மூப்பனார் போன்றவர்களின் சூழ்ச்சியால் வன்னியர்களுக்கான தனி  இடஒதுக்கீடு  நழுவி போனது. இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் பாமக தன பலத்தை நிரூபிக்கும் விதமாக வெற்றிகளை பெற்றது. 

அப்பொழுது ஆட்சிக்கு வந்த குள்ள நரி கருணாநிதி, தன்னிடம் உள்ள வன்னிய திராவிட கிறுக்கன்களோடு, மற்ற வன்னியர்களின்(பாமக) ஓட்டுகளையும்  பெறுவதற்காக , 108 சாதிகளை சேர்த்து  மிகவும் பிற்படுதபட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கியது. இந்நிலையில் திராவிட கட்சிகளில் உள்ள வன்னிய சொந்தங்களை பாமக விற்கு கொண்டு வருவதற்கான பரப்புரையை மேற்கொள்ளாமல் , திராவிட மாயையில் தன்னையும் தொலைத்து , சில தற்காலிக வெற்றிகளை பெற தொடங்கியது பாமக. தமிழகத்தின் 2 திராவிட கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு பாமக விடம் கூட்டணி வைத்து மாறி மாறி அரியணை ஏறினர். அதே சமயம் பாமக விற்கு இடங்கள்  தந்ததால், தங்கள் கட்சியில் வன்னியர் பகுதிகளில் கூட மாற்று சமூகத்தினருக்கு வாய்ப்புகளை வழங்கின திராவிட கட்சிகள். 

இவ்வாறான சூழ்நிலையில் மருத்துவர் அய்யா அவர்கள் தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முதல் ஆளாக குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தினார் . சமசீர்கல்வி என்ற வார்த்தை வழக்கத்தில் வருவதற்கு காரணம் மருத்துவர் அய்யா தான் எனலாம். இவ்வாறு தமிழன போராளியாக அய்யா உருவெடுத்தாலும் , மாற்று சமூகத்தினர் வன்னிய தலைவராகவே பார்த்தனர். அய்யாவின் தமிழை நோக்கிய பயணத்தில் வன்னிய இளைஞர்கள் சோர்வடைந்தனர். தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் அரசியல் எழுச்சி தங்களின் வீழ்ச்சி என்று எண்ணிய  திராவிடர்கலும் இதர தமிழ் சிறுபான்மையினரும் கூட்டணியில் இருந்தாலும் பாமக விற்கு வாக்களிக்கவில்லை. 

இப்படி சூழ்சிகளாலும் , வஞ்சனைகளாலும் நரிகள் ஒரு இனத்தையே வீழ்த்த துடித்து கொடிருந்த தருவாயில் , அய்யா அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து, இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவை அறிவித்தார்கள்.இது மீண்டும் வன்னிய இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை கீற்றுகள் துளிர்க்க தொடக்கமாய் அமைந்தது. இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நம் மீது திட்டமிட்டு பல வருடங்களாய் நடதட்டப்பது வரும் மானப்ப்போரின் , ஒரு நிகழ்வு (தருமபுரி ) ஏற்படுத்திய ஆறா வடுக்கு மருந்திட நாதியில்லாமல் நின்ற இனத்திற்கு , மருத்துவர் அய்யா தகப்பனாய் நின்று தேற்றி கொண்டிருக்கிறார். இப்பொழுது நடக்கின்ற மாற்றங்கள் ஊடகங்களை பார்க்கின்ற , படிகின்ற ஒரு சாராரை மட்டுமே சென்றடைகிறது. இவற்றை மீறி வெற்றி பெற அனைத்து கருத்துகளும் சாதாரண மக்களுக்கும் கொண்டு சென்றாலொழிய முன்னேற்றம் சாத்தியபடாது.   

இன்று, சிதறி கிடந்த எம்மினம் சேர்ந்து வருகிறது , சேர துடிக்கிறது ...... தன்னை சூழ்ந்திருந்த திராவிடம் என்ற முற்போக்கு வியாதியிலிருந்து  மீள முடியாமல் சிலர் தவிக்கின்றனர். "கொள்ளையர்கள்" என குள்ள நரி சொல்லிய வார்த்தை திராவிட நோயாளிகளின் நெஞ்சங்களில் முள்ளாய் குத்தி உறுத்தி கொண்டிருக்கிறது. 

ஏ பெரியார் எனும் பேயினால் பீடிகைக்கப்பட்ட சொந்தங்களே ,  திராவிட இருளிலிருந்து , வெளிச்சத்தை நோக்கி வாருங்கள். நமக்குள் இருக்கும் சிறு சிறு சகோதர சண்டைகளை , மறக்க விட்டு பாமகவிற்கு வாருங்கள். நம் இன முன்னேற்றத்தை முன்னெடுப்போம்.