Tuesday, January 7, 2014

பெரும்பான்மையினரும் இந்நாட்டின் மக்களே

லயோலா கல்லூரி இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்ற அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்களை சிறுபான்மையினரே நிறைய நடத்துகின்றனர். இப்படி இருக்கையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டாம் என்றால் , ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் நிலை என்ன ஆவது? சட்டமே இப்படி பெரும்பான்மை மக்களை ஒதுக்கினால் , சிறுபான்மையினருக்கும் , பெரும்பான்மையினருக்கும் எப்படி இணக்கம் உருவாகும். இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.  


                                                           

Monday, September 30, 2013

மக்களுக்கான அரசியல் எது?

தமிழ் சமூகத்தில் சாதி என்பது கலாசாரத்தை வளர்த்த ஒரு கருவியாகவே அமைந்திருக்கிறது. ஒவ்வொரு சாதியும் , ஒவ்வொரு வகையான வாழ்வியல் முறைகளை பின்பற்றுகின்றன . தமிழகத்தின் நாகரீகம் , பொருளாதாரம் , கல்வி ஆகியவற்றின் வளர்ச்சி சாதி அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பது கண்கூடு.  தமிழக மக்கள் கடவுளை வழிபடுகிறார்கள். பல விதமான சடங்கு முறைகள், அவர்கள் வாழ்க்கையோடு பின்னிபினைந்து உள்ளது.  மக்கள் குறிப்பிட்ட மத கடவுளை வழிபட்டாலும், அந்த மதமாக தங்கள் கலாசாரத்தை அமைத்து கொள்ளவில்லை , சாதியின் அடிப்படையிலேயே பழக்கவழக்கங்கள்(எ. கா : இரு தாலி, இறப்பு சடங்குகள்) அமைகின்றன.

இயல்பு வாழ்க்கை இப்படி இருக்க, யதார்த்த மக்களின் வாழ்க்கைக்கு முரணாக  தி.க , பா.ஜ.க, திமுக , அதிமுக , கம்யூனிஸ்ட் , தேமுதிக , நாம் தமிழர் போன்ற இயக்கங்கள் கொள்கைகளை கொண்டுள்ளன.

திக , திமுக , அதிமுக,  ---   திராவிடம்( மாற்று மொழியினரை வளர்த்து , தமிழரை ஒழிப்பது), கடவுள் மறுப்பு , பெரும்பான்மை மக்கள் நம்பிக்கைகளை கிண்டல் செய்வது இவர்கள் கொள்கை

தேமுதிக - கொள்கை யா அப்படி என்றால்?

பிஜேபி , ஆர் எஸ் எஸ் ---  சாதியை தாண்டி இந்து வாக ஒன்று கூடுதல் , சாதி அடிப்படையில்  இட ஒதுக்கீடு கூடாது

கம்யூனிஸ்ட் --   உழைக்கும் மக்களின் முன்னேற்றம் , தலித்துகள் தவிர வேறு யாரும் உழைக்கும் மக்கள்  அல்ல



மக்கள்  இந்துத்துவ தத்துவங்களை தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறார்கள். ஏனெனில் இடஒதுக்கீடு மற்றும் சாதிக்கு எதிரான அவர்களது கொள்கை தங்கள் வாழ்வாதாரதிர்க்கே வேட்டு வைத்து விடும் என்பதை அறிந்திருப்பதால்.  திராவிட இயக்கங்கள் கடவுள் வழிப்பாட்டையும் எதிர்க்கின்றன, சாதிகளையும் எதிர்க்கின்றன. மக்கள் திராவிட இயக்கங்களுக்கு வாக்கு பிச்சை போட்டாலும் , அவர்களது கொள்கைகளை வாழ்வில் பின்பற்றுவது இல்லை. இடைக்காலத்தில் பெரியார் போன்றவர்கள் ஏற்படுத்திய மாயை , பிராமண எதிர்ப்பு , இலவசங்களுக்கு மதி மயங்கியே வாக்களிக்கிறார்கள்.

இன்றைய அரசியல் சூழலில் , கடவுள் மறுப்பு இல்லாத , அனைத்து சாதிகளுக்கும் அவர்களின் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு , தீண்டாமை ஒழிப்பு , பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுக்கிற , தமிழ் கலாசாரத்தை காக்கிற கொள்கைகளையுடைய கட்சியே மக்களுக்கான கட்சியாக இருக்க முடியும்.


நாம் மேற்கண்ட இயக்கங்கள் எல்லாம் பெரியார் , கார்ல் மார்க்ஸ் , அம்பேத்கர் போன்ற தலைவர்களில் ஒருவரை  முழுமையாக பின்பற்றும் கட்சியாகவே உள்ளன. இந்த மூன்று தலைவர்களின் கொள்கைகள் முழுவதும் மக்களுக்கான வெற்றிகளை தருவனவாக இல்லை.

இந்நிலையில் பெரியாரிடத்தில் இருந்து சமூகநீதியையும் , மார்க்ஸ் இடமிருந்து பாட்டளிகளின் முன்னேன்றதிர்க்கான முறைகளையும் , அம்பேத்காரிடமிருந்து ஒரு சமூக தலைவருக்கான பண்புகளையும் எடுத்து மக்களுக்கு தேவையான மக்களின் அரசியலை முன்னெடுத்து வரும் ஒரே அரசியல் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறது.


ஆனால் பாமக தமிழகத்தில் ஏன் இன்னும் ஆளும் அதிகாரத்தை கைப்பற்றவில்லை. அனைத்து கட்சிகளிலும் உள்ளது போல , கீழ்மட்ட தலைவர்களின் தவறான செயல்பாடுகள் , தொண்டர்களை மதியாமை, தலைமையின் ஒரு சில சுயசார்பான முடிவுகள் என ஒப்புக்கான காரணங்கள் இருந்தாலும். ஆழமாக ஆய்வு செய்யும் பொழுது

1. தமிழ் சமூகத்தின் பெரும்பான்மை சமூக மக்கள் பாமக வை ஆதரிப்பதும்
2. பெரும்பான்மை மக்கள் ஆதரிப்பதால் சிறுபான்மை பாதிக்கபடுவார்கள் என்ற யதார்தத்திர்கெதிரான  மனோநிலை பரப்ப பட்டிருப்பது  
3. பாமக வை பெரிதும் ஆதரிக்கும் சமூகத்தினர் வன்முறையாளர்கள் என்ற பொய்பிரசாரம்
4. மொழி சிறுபான்மையினர் தாங்கள் அனுபவித்து வரும் அரசியல் அதிகாரங்கள் பறிபோய்விடும் என்பதால் செய்திருக்கும் சொல்லத்தகாத நுண்ணரசியல் சதிகள்


போன்ற மேற்கண்ட தவறாக பரப்பபட்டிருக்கும் காரணிகளே   மக்கள் நல்லாட்சியை தொடர்ந்து இழந்து கொண்டிருப்பதற்கு காரணமாக தெரிகிறது. மேற்கண்ட மாயைகளை  மக்களிடத்தில் எடுத்து கூறி மக்களை மரண பாதையிலிருந்து மடை மாற்றி மகத்தான பாதைக்கு திருப்புவது இன்றைய இளைஞர்களின் முன்னே இருக்கும் மாபெரும் பணி. இதனை அரசியல் விழிப்புணர்வு பெற்ற அனைத்து தமிழ் இளைஞர்களும் இணைந்து செய்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தி தமிழகத்தின் விடியலுக்கு பாடுபட வேண்டும்.

 
 . 

Sunday, January 27, 2013

வன்னியனே எங்கே செல்கிறாய்?

வன்னியர்களின் வாழ்வியல் நிலையை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்ட  வன்னியர் சங்கமும்,  பாட்டாளி மக்கள் கட்சியும் மருத்துவர் அய்யா தலைமையில் வன்னிய மக்களின் உரிமைகளுக்காக போராடியது. 1987 ல் 21 உயிர்களை இழந்து நடத்தப்பட்ட சமூக நீதிக்கான சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து , காங்கிரஸ் அரசு வன்னிய பிரதிநிதிகளை வாழப்பாடியார் மூலமாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. திரு மூப்பனார் போன்றவர்களின் சூழ்ச்சியால் வன்னியர்களுக்கான தனி  இடஒதுக்கீடு  நழுவி போனது. இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் பாமக தன பலத்தை நிரூபிக்கும் விதமாக வெற்றிகளை பெற்றது. 

அப்பொழுது ஆட்சிக்கு வந்த குள்ள நரி கருணாநிதி, தன்னிடம் உள்ள வன்னிய திராவிட கிறுக்கன்களோடு, மற்ற வன்னியர்களின்(பாமக) ஓட்டுகளையும்  பெறுவதற்காக , 108 சாதிகளை சேர்த்து  மிகவும் பிற்படுதபட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கியது. இந்நிலையில் திராவிட கட்சிகளில் உள்ள வன்னிய சொந்தங்களை பாமக விற்கு கொண்டு வருவதற்கான பரப்புரையை மேற்கொள்ளாமல் , திராவிட மாயையில் தன்னையும் தொலைத்து , சில தற்காலிக வெற்றிகளை பெற தொடங்கியது பாமக. தமிழகத்தின் 2 திராவிட கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு பாமக விடம் கூட்டணி வைத்து மாறி மாறி அரியணை ஏறினர். அதே சமயம் பாமக விற்கு இடங்கள்  தந்ததால், தங்கள் கட்சியில் வன்னியர் பகுதிகளில் கூட மாற்று சமூகத்தினருக்கு வாய்ப்புகளை வழங்கின திராவிட கட்சிகள். 

இவ்வாறான சூழ்நிலையில் மருத்துவர் அய்யா அவர்கள் தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முதல் ஆளாக குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தினார் . சமசீர்கல்வி என்ற வார்த்தை வழக்கத்தில் வருவதற்கு காரணம் மருத்துவர் அய்யா தான் எனலாம். இவ்வாறு தமிழன போராளியாக அய்யா உருவெடுத்தாலும் , மாற்று சமூகத்தினர் வன்னிய தலைவராகவே பார்த்தனர். அய்யாவின் தமிழை நோக்கிய பயணத்தில் வன்னிய இளைஞர்கள் சோர்வடைந்தனர். தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் அரசியல் எழுச்சி தங்களின் வீழ்ச்சி என்று எண்ணிய  திராவிடர்கலும் இதர தமிழ் சிறுபான்மையினரும் கூட்டணியில் இருந்தாலும் பாமக விற்கு வாக்களிக்கவில்லை. 

இப்படி சூழ்சிகளாலும் , வஞ்சனைகளாலும் நரிகள் ஒரு இனத்தையே வீழ்த்த துடித்து கொடிருந்த தருவாயில் , அய்யா அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து, இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவை அறிவித்தார்கள்.இது மீண்டும் வன்னிய இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை கீற்றுகள் துளிர்க்க தொடக்கமாய் அமைந்தது. இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நம் மீது திட்டமிட்டு பல வருடங்களாய் நடதட்டப்பது வரும் மானப்ப்போரின் , ஒரு நிகழ்வு (தருமபுரி ) ஏற்படுத்திய ஆறா வடுக்கு மருந்திட நாதியில்லாமல் நின்ற இனத்திற்கு , மருத்துவர் அய்யா தகப்பனாய் நின்று தேற்றி கொண்டிருக்கிறார். இப்பொழுது நடக்கின்ற மாற்றங்கள் ஊடகங்களை பார்க்கின்ற , படிகின்ற ஒரு சாராரை மட்டுமே சென்றடைகிறது. இவற்றை மீறி வெற்றி பெற அனைத்து கருத்துகளும் சாதாரண மக்களுக்கும் கொண்டு சென்றாலொழிய முன்னேற்றம் சாத்தியபடாது.   

இன்று, சிதறி கிடந்த எம்மினம் சேர்ந்து வருகிறது , சேர துடிக்கிறது ...... தன்னை சூழ்ந்திருந்த திராவிடம் என்ற முற்போக்கு வியாதியிலிருந்து  மீள முடியாமல் சிலர் தவிக்கின்றனர். "கொள்ளையர்கள்" என குள்ள நரி சொல்லிய வார்த்தை திராவிட நோயாளிகளின் நெஞ்சங்களில் முள்ளாய் குத்தி உறுத்தி கொண்டிருக்கிறது. 

ஏ பெரியார் எனும் பேயினால் பீடிகைக்கப்பட்ட சொந்தங்களே ,  திராவிட இருளிலிருந்து , வெளிச்சத்தை நோக்கி வாருங்கள். நமக்குள் இருக்கும் சிறு சிறு சகோதர சண்டைகளை , மறக்க விட்டு பாமகவிற்கு வாருங்கள். நம் இன முன்னேற்றத்தை முன்னெடுப்போம்.     

Monday, September 10, 2012

அணுமின்சாரமும் , மக்கள் போராட்டங்களும்

உலக மின் நுகர்வோர்கள் வரும் காலங்களில் அணு மின்சாரத்தையே சார்ந்து இருக்க முடியும் எனும் பொய் பிரசாரத்தை முன் வைத்து இந்தியாவும் அணுமின் நிலையங்களை அமைக்க தொடங்கியது . இந்திய அரசு 63000MW மின் உற்பத்தி என்ற இலக்கை 2032 ம் ஆண்டிற்குள் ,அணுமின்சாரத்தின் வழியாக பெற திட்டமிட்டுள்ளது .  இதே இந்திய அரசு 1970 ஆம் ஆண்டில் வெளியிட்ட  அறிக்கையில் ௨௦௦௦ ஆவது ஆண்டில் 43,000 மெகாவாட் அணுமின்சாரம் உற்பத்தி என்ற இலக்கை அடைவோம் என்று  கூறியது. ஆனால் இந்தியாவில் உள்ள ஆறு அணுமின் நிலையங்களிலிருந்தும்  2011 ஆண்டு வரை வெறும் 4780 MW என்ற இலக்கையே எட்ட முடிந்திருக்கிறது.  1990  களிலிருந்து ரஷ்யாவையும் , தற்பொழுது ஆஸ்திரேலியாவிடமும் உரேநியதிற்காக கையேந்தி கொண்டிருகிறது இந்தியா. அணு மின்சாரத்திற்கான செலவும் மிக அதிகம்.

உலகிலேயே அதிக அணு உலைகள் உள்ள பகுதி மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆகும். அங்குள்ள 18 நாடுகளில் எட்டு நாடுகள் அணுமின்சாரத்திட்டங்கள் இல்லாத பகுதி என அறிவித்து விட்டன. 4 நாடுகள் புதிய அணு உலைகள் தொடங்க மாட்டோம் எனக் கூறிவிட்டன. செர்மனி நாடு 2022 க்குள் அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாகக் கூறிவிட்டது. அங்கு வெறும் மூன்று நாடுகள் மட்டுமே அணுமின்சாரத்தை ஆதரிக்கின்றன. ஐரோப்பா முழுவதிலும் கடந்த 30 ஆண்டுகளாக புதிய அணுமின் திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை.

இதே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் அணு மின்சாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேற்கு வங்கஅரசு தனது மாநிலத்தில், 6 ருசிய ரியாக்டர்களை கொண்டு 6000 MW மின்சாரம் உற்பத்தி செய்யகூடிய அணு மின் திட்டத்தை ஏற்காமல் தடுத்து நிறுத்தியது.  அணுமின்  நிலையங்களில் ஏதேனும் விபத்துகள் நடந்து சேதங்கள் ஏற்பட்டால் , யார் , எவ்வளவு நிதி உதவி வழங்குவது என்பதிலும் தெளிவான வழி காட்டுதல்கள் இல்லை என்று கூறபடுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தின் தென் பகுதியில் இருக்க கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, அதன் தொடக்க நிலையிலிருந்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய மற்றும் தமிழக அரசுகள்  தொடக்கதிலிருந்தே இந்த மக்கள் போராட்டத்தை அலட்சிய படுத்தி வந்தன. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த போராட்டங்கள் கூர்மைபடுதபட்டன.  கூடங்குளம் பகுதியை சாராத மக்கள் மனதில் , " இந்த திட்டத்தின் தொடக்கதிலிருந்தே இதனை எதிர்த்து கட்டுமான நிலையிலேயே எதிர்த்து இருக்கலாமே?  , இப்பொழுத் நிறுத்தினால் பல ஆயிரம்  கோடி மக்கள் வரி பணம் வீணாகாதா? என பல கேள்விகள் எழுந்திருக்கலாம். ஆனால் தொடக்கத்திலிருந்து நிகழ்ந்த மக்கள் போராட்டங்கள் அனைத்தும் அரசுகளால் புரந்தள்ளபட்டன என்பதும் , ஊடகங்களால் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்பதுமே உண்மை.

நமக்கு மின் சக்தி மிக அவசியமானதுதான் , ஆனால் அது நம் மக்களின் வாழ்கையை அடகுவைத்து தான் பெறப்பட வேண்டுமா ? அரசு தற்பொழுது நிறுவியுள்ள அணுமின் நிலையம் மூன்றடுக்கு பாதுகாப்புடன் இருப்பதாக ஈற்று கொண்டாலும், நம் அறிவிற்கு எட்டாத புது விதமான இயற்கை பேரழிவுகள் ஏதேனும் ஏற்பட்டு அதனால் அணுகதிர் வீச்சு வெளியேறினால் எத்துனை ஆயிரம் மக்கள் பாதிக்கபடுவார்கள்? இன்றும் கல்பாக்கம் பகுதியில் பிறக்கின்ற குழந்தைகள் பாதிப்புக்குளாகின்றனர்.
 கடந்த வார இறுதியில் ஸ்டான்போர்ட் பல்கலைகழக ஆய்வு குழுவினர் வெளியிட்ட அறிக்கை  காற்றின் மூலம்  1800 TW  மின்சாரம் பெற முடியும் என்று கூறுகிறது. இது உலக மின்தேவையான 18 TW போன்று 100 மடங்கு அதிகமானது.எனவே அரசு மக்களின் போராட்டத்திற்கு செவி மடுத்து , காற்று மற்றும் சூரிய மின் உற்பத்திகளை பெருக்கி நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதே  சாலச்சிறந்ததாகும்.

Thursday, January 10, 2008

வருண பேதம்

பகுதறிவு கொள்கை இந்துகளுக்கு எதிராக மட்டுமே ஏவப்பட்டுள்ள்து. மற்ற மார்கங்களில் உள்ள மூட பழக்கவழக்கங்களை சாடவில்லை என்பது மிக வருந்ததக்கது. அதே தருணம் இந்து மத சம்பிரதாயாங்களால் ஏமாற்றப்படும் மக்களே அதிகம். வேதம் என்ற பெயரால் வருணங்களை ஏற்படுத்தி மக்களை அடிமைபடுத்திய பிராமணர்களை என்ன செய்வது. பகுதறிவு கொள்கை பெரும்பான்மை மக்களுக்கு எதிராக உள்ளது போல, இந்து மத வகுப்புவாதங்களும் எற்றுகொள்ளகூடியது அல்ல.

Tuesday, September 25, 2007