தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் ஆட்சிகளால் தமிழகம் சீரழிந்துள்ளது. விவசாயத்தில் நலிவு, சில்லறை வணிகத்தில் பெரும் முதலாளிகள், அரசு அலுவலகங்களில் லஞ்சம், மணல் கொள்ளை ஆகியவற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இவற்றிலிருந்து எப்படி விடுதலை பெறுவது? இந்த கேள்விக்கு, தமிழகத்தின் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தன்னை அறிவித்து கொண்டுள்ள விஜயகாந்த் கூறிய விடை, தான் லஞ்சம், ஊழல் அற்ற நிர்வாகத்தை தருவேன் என்றதுதான். ஆனால் அவரது கட்சியே ஊழல்வாதிகளின் கூடாரமாக இருக்கிறது. தே.மு.தி.க வின் துணை பொதுச்செயலளர் கு.ப.கிருட்டினன் அவர்கள் ஊழல் வழக்கில் கைதானவர், கோவை மாவட்ட தலைவர் ஓர் ஏழை தாயின் நிலத்தை ஏமாற்றியதாக கூறபட்டவர். இவ்வாறு ஊழல்வாதிகளை கட்சியில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்போம் என்கிறீர்களே என விஜயகாந்திடம் கேட்டால் " கடல் நீரில் என்ன கலந்தாலும் அதன் உப்பு தன்மை மாறாது " என்கிறார். அப்படியானால், இவரது கட்சி என்ன கார்ப்பரேட் கம்பெனியா?, இவர் ஒருவர்தான் கட்சியா?. இது போக "ஊழல் என்பது தர்க்க ரீதியாக ஒரு தனி மனிதனின் ஒழுக்கத்தை சார்ந்தது". இவர் கட்சியில் உள்ளவர்களே ஊழல்வாதிகளாக இருக்கும்போது இவரால் எப்படி இந்த சமுதயத்திற்கு ஊழலற்ற ஆட்சியை தரமுடியும் . தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு போலி திராவிட கட்சிகளின் ஆட்சிப்பிடியிலிருந்து தமிழ் தேசம் மீள வழிதான் என்ன? தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஒரு கூட்டணிதான் இன்றைய தேவை. இன்று அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக போராடிவரும் பா.ம.க, கம்யூனிசுடுகள், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழர் தேசிய இயக்கம், திராவிட கட்சி ஆகியவை ஒன்றுகூடினால் நல்லாட்சியை கொடுக்க இயலும்.
Wednesday, August 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கம்யூனிஸ்டுகள் சரி, பா.ம.க. பெரிய உத்தம கட்சியா? 50 ரூபாய் வாங்கிக் கொண்டு வைத்தியம் பார்த்த மருத்தவரய்யாவுக்கு ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி? தலித் எழில்மலை ஏன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்? அடித்த பணத்தில் பங்கு தராமல் ஏமாற்றினார் என்பதால்தானே? தீரன் ஏன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்? ரொம்ப ஒழுங்கு மாதிரி பேசக்கூடாது. தில்லியில் அன்புமணி பார்த்த இடத்தில் எல்லாம் கையை நீட்டிக்கொண்டே திரிகிறார். இதில் ஊழல் ஒழிப்பு வேற...
Post a Comment